16.4.10

கதை


நான் யாருக்கும் பின்னூட்டம் அளிக்கவில்லைஎன்றால் யாரும் எனக்கு பின்னூட்டம் செய்யமாட்டார்கள் என்று சொல்கிறார் நேசமிதிரன். நல்லது. இன்று எனக்கு அதிகபட்ச சொடுக்காக என்பது உள்ளது. எனக்கு தெரிந்த ஐந்து பேர் பதினாறு முறை எனது வலைதளத்தை சொடுக்கினார்கள் எனக்கொள்கிறேன். நன்றி.

************************

ஒரு கதையை இனிய தங்கை அனுப்பியிருக்கிறாள்!

தந்தையும் பத்து வயது மகனும் புங்கமரத்துக்கு அடியில் அமர்திருக்கிறார்கள். அப்பா கேட்டார். மகனே மரத்தில் இருக்கும் பறவை எது. அது ஒரு காக்காய், என்கிறான் மகன். மீண்டும் அப்பா கேட்டார். மகனே மரத்தில் இருக்கும் பறவை எது. அது ஒரு காக்காய், என்கிறான் மகன். மீண்டும் அப்பா கேட்டார். மகனே மரத்தில் இருக்கும் பறவை எது. அது ஒரு காக்காய், என்கிறான் மகன். மீண்டும் அப்பா கேட்டார்.

நீ என்ன செவிடா.. அப்பா. நான் சொல்வது கேக்கவில்லையா. அல்லது நீ ஒரு குருடா.

அப்பா சொன்னார். உன் மூன்று வயதில் இதே இடத்தில் இந்த கேள்வியை நூற்றி எழுபது முறை கேட்டாய் மகனே. நான் ஒவ்வொரு முறையும் உன் முகத்தில் ஒரு இனிய முத்தமிட்டு சொன்னேன் 'அது ஒரு காக்கை' என்று.

இப்பொழுது நான் மூன்று முறை அந்த கேள்வியை கேட்டதும் நீ என்னை செவிடன்கிறாய்.

***************

பிள்ளைகளைப் பெறும் வரை நாம் பெற்றோர்களை குறை சொல்கிறோம். பிள்ளைகள் பெற்ற பின் நாம் குழந்தைகளை குறை சொல்கிறோம்.

*****************

நேசமித்திரனை இந்த பத்து பெண்களிப்பற்றிய குறிப்புகளுக்கு தொடர் பதிவை அளிக்க முதலில் அழைக்கிறேன்.

**********************

2 கருத்துகள்: