காமா..
ஒவ்வொரு துளியும் தீயென்னும் அச்சக்காடு
ககனத்தில் ஓங்கிய பெருவிருட்சம் 
சாக்காடு எனும் முத்தத் திமிங்கலம் 
தசை அறுந்து வடியும் குருதிச்சுவை 
நாணம் விழுங்கும் வளையறுக்கும் வாள்
ஓங்காரம் ஒன்றின் ஒலிவடிவம் 
நீ 
திசைக்கொன்றாய் கூந்தல் நுனிகள்
அவற்றிலிருந்து வெளியேறும் நீர்ப்பறவை
மரகுறுக்கின் வரிகொள் வடிவம் 
நிறமிழக்கும் யாழிசைக்குறிப்பு 
நீ 
தாவரங்கள் பரிமாறும் மகரந்த வாசம்
பலி கொள்ளும் அரவத்தின் கூர்நாக்கு 
திறந்தவுடன் நிறைந்துவிடும் அகல்விளக்கு 
சுயம் கொல்லும் காமத்தின் உடலுறுப்பு 
நீ 
தெருவோரம் தேங்கும் மழைநீர்புழுவின் 
அழுகிய இருப்பு 
நான்..
நிலவொளியில் ஊளையிடும் ஓநாயின் 
வாயொழுகும் உமிழ்நீர் சுவை
அது. 
முடிக்கத்தெரியா கவிதை நீ
முடிக்கமுடியா வெற்றிடம் நான்
கவிதை அது.
*******************************
இக்கவிதை முடிவுக்கு வருகிறது.
**********************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக