23.1.10

காதற்புள்.




******************************
நண்ப...
ஒரு துரோகத்தின் விலை
காதலைத் தவிர என்னவாய் இருக்க
முடியும்
திரும்பவியலாத நீள் பயணத்தின்
முடிவை அறிய அந்த சிறு
துரோகம் போதுமானதாய்
இருக்கும்போது
கால் இடறும் பளபளப்பும்
ஒழுங்குமற்றதொரு கல்லை
எடுத்து எதிர்வரும் எனது
சட்டைப்பைக்குள் வைக்கும் காதலை
நான் துரோகத்திற்கு விற்றுவிடுவது
எந்தவிதத்தில் நியாயமில்லாமல் போகும்

நண்ப..
நதியொன்றின் குறுக்கில்
நிரப்பப்படும் கருங்கற்களை
காதல் என்று சொல்லாமல்
என்ன செய்வது
கற்களினிடை நுண்ணிய துவாரங்களில்
கசிந்து வெளியேறும் நீரை
நீ துரோகமென்று விளிக்கும்போது

நண்ப...
மாலைக்கருக்கலில்
கூரிய அலகில் இரைகவ்வி
பறக்கும் பசும் புள்ளின் எச்சம்
விடியக் காலை கருக்கலில்
தலைமீது விழுவது காதலின்
துரோகமென்கிறேன் ..
நீ
துரோகத்தின் காதலென்கிறாய்.

*********************

1 கருத்து:

  1. aamam natpukku throkam seithu thaan kaathalai vanga iyalum.. ithu than enakku pattathu . throgathin kaathal enganam? konjam puriya vaingalen..
    padma
    ps kettal thavara?

    பதிலளிநீக்கு