13.1.10

சோமா வனதேவதா...

ரமேஷ் வைத்யாவின் பாட்டை வழியாக கண்டுபிடித்து விட்டேன்.

********************

முல்லைப்பூ வாசம் மூக்குல வீசும்

கன்னிப்பூ வாசம் என் நெஞ்சுக்குள்ளே

அத்த மகளே மெத்த வேணுமா

நித்தம் ஒரு புத்தம்புது முத்தம் கொடுநீ - இந்த

கன்னிப்பெண் கண்ணுக்குள் கொட்டிக்கிடக்குற

கற்பன எத்தனை கோடி - இவ

சிங்காரக்கொண்டைக்கு முல்லைப்பூ வை - அந்த ( முல்லைப்பூ வாசம் ...)

குண்டு விளையாடச் சேக்கலன்னு ரெண்டு

வண்டு கண்ணில் கண்ணீர் வடிச்சவளே - நான்

தோத்த வருத்தத்த அழுது கரைக்கையில்

தேத்தி என் கண்ணீரை தொடச்சவளே

வெடலப்பருவத்து வெளையாட்டுக்கதைஎல்லாம்

நெஞ்சுக்குள்ளே இன்னும் ஞாபகமா ... (இவ சிங்காரக்கொண்டைக்கு...)

வைகை மணல்கூட்டி வீடு கட்டி அந்த

வாசலில் எம்பேர வரஞ்சவளே - அந்த

பாதி விளையாட்டும் படிப்பும் நிறுத்திட்டு

பச்ச கிடுகோரம் மறஞ்சவளே

அழுது பிரிஞ்சாலும் அத்தானுக்குங்கனவு

பொழுது விடுஞ்சாலும் போகலையே ( இவ சிங்காரக்கொண்டைக்கு ...)

சொந்தபந்தம் உள்ள உறவுக்குள்ளே - வேற

சாதி சனமுன்னு பேதமில்ல சொந்தம்

ஆயிரமானாலும் காசு பணத்துல

நீயும் நானும் சமானமில்ல

தோள் தொட்ட கன்னிக்கு பூமால நான் போட

நாள் வந்து சேராம போயிடுமோ - இவ சிங்காரக்கொண்டைக்கு முல்லைப்பூ...

****************

ஆரம்ப தொன்னூறில் எழுதியிருப்பார் என்று நினைக்கிறேன். தொடர்ந்து அவரைப்பற்றி தகவல்களை அறிந்து வருகிறேன். ரமேஷின் அறிவுத்தேட்டமும் மனத்தேவைகளும் வாழ்வின் மீதான அவரின் வன்மமும் எனக்கு மிகப்பெரிய உளவியல் சிக்கலை உருவாக்குகிறது. சுயஎள்ளலும் தார்மீகத்தின் மீது காறித்துப்பும் அவரது இருப்பு முறையும் என்னை கிளர்வு கொள்ளச்செய்கிறது .

********************

ரமேஷ் வைத்யா என்கிற சோமா வனதேவதா .. என் மனநெருக்கமான ஆளுமை.. உன்னை தொடர்ந்து நான் ரசிக்கிறேன்..

உனக்கு என் அன்பு.

**********************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக