15.10.09

ரயில் நிலையம் - ஒன்று.

ஒரு வழியாஹ நானும் இந்த நீரோட்டத்தில்.. திண்டுக்கல்லில் இருக்கிறேன். தீபாவளிக்கு முன்தானாள் இன்று.! காலையில் நல்ல மழை. ரயில்வே ஸ்டேஷன் கழுவி விட்டது மாதிரி ஆகிவிட்டது. ரயில்வே ஸ்டேஷன் பற்றிய முதல் பத்து குறிப்புகள் இங்கு:

*

ரயில் நிலையம் பற்றி

தெரியாதவற்றை தெரிந்து

கொள்ள ரயில் நிலையம் பற்றி

தெரியாமல் இருக்க வேண்டும்.

*

தண்டவாளத்துக்கு மேல்

ரயில் தெரிதிறது. ரயிலுக்குள் மனிதர்கள்

தெரிகிறார்கள். மனிதர்களுக்கு

வெளியில் ரயில் தெரிவதில்லை

*

அத்தனை மனிதர்களும் கலைந்த

பின்னாலும் காகத்திற்கு கரைய

தெரிகிறது. குழாயில் கசிந்து சொட்டும்

நீர் தெரிகிறது அதற்கு.

*

உலக பயங்கரவாதத்திற்கு

துளியும் குறைந்ததல்ல ரயில்

புறப்படும் பொருட்டு எழுப்பும் கூவல்.

*

ஒவ்வொரு ரயில் நிலையமும்

அஹாலத்தில் கொல்கிறது

காலத்தை.

*

குழந்தைகளுக்கு பொம்மை ஆகிப்போன

ரயில்களை யானை பாகனின்

நேர்த்தியோடு முன்னும் பின்னும்

செழுத்துகிறான் ரயிலோட்டி

நீண்ட பெருமூச்சை வெளியேற்றி

உறுமி பயமுறுத்தும் ரயிலை

பார்த்து பயப்படும் என்னை

கேலி செய்கிறார்கள் குழந்தைகள்.

*

மீதி நாளைக்கு..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக